ரூ.1 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பயணி கைது


ரூ.1 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பயணி கைது
x

ரூ.1 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பயணி கைது செய்யப்பட்டார்.

மும்பை,

வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கென்யா ஏர்வேஸ் விமானம் ஒன்று கடந்த 19-ந்தேதி மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதில் நைரோபி நாட்டில் இருந்து வந்த பயணி இஸ்மா ஒப்கா வான்டேரா (வயது28) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உதவியால் வயிற்றுக்குள் இருந்த மெத்தகுயிலான் என்ற போதைப்பொருளை மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story