கண்ணாடி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் பலி


கண்ணாடி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 3 Aug 2023 6:45 PM GMT (Updated: 3 Aug 2023 6:46 PM GMT)

மும்பை - புனே விரைவு சாலையில் கண்ணாடி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

மும்பை,

மும்பை - புனே விரைவு சாலையில் கண்ணாடி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

லாரி கவிழ்ந்து விபத்து

மும்பை - புனே விரைவு சாலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ராய்காட் மாவட்டம் கொப்போலி பகுதியில் கண்ணாடி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. மோதிய பிறகு கண்ணாடி ஏற்றி வந்த லாரி ரோட்டில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த கண்ணாடிகள் ரோட்டில் விழுந்து தூள் தூளாக நொறுங்கின.

மேலும் விபத்தில் லாரி டிரைவர் சதானந்த் பாட்டீல் (வயது43) உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சதானந்த் பாட்டீல் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இதற்கிடையே விபத்து காரணமாக மும்பை - புனே நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோட்டில் கவிழ்ந்த லாரி, நொறுங்கிய கண்ணாடிகள் அகற்றப்பட்டு காலை 8.30 மணிக்கு பிறகு மும்பை நோக்கி வரும் சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

இதனால் நேற்று காலை புனேயில் இருந்து மும்பை நோக்கி வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story