ஆட்டோ மீது சிமெண்ட் கலவை லாரி மோதல்- டிரைவர் பலி; 3 பேர் படுகாயம்


ஆட்டோ மீது சிமெண்ட் கலவை லாரி மோதல்- டிரைவர் பலி; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Sep 2022 8:15 PM GMT (Updated: 29 Sep 2022 8:15 PM GMT)

புனே ஹடப்சர் சோலாப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது சிமெண்ட் கலவை லாரி மோதல்

புனே,

புனே ஹடப்சர் சோலாப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சிமெண்ட் கலவை லாரி ஒன்று சென்றது. அப்போது ஸ்கூட்டர் ஒன்று வேகமாக வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க லாரி டிரைவர் ஒரு பக்கமாக திருப்பினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகே இருந்த மரத்தின் மீது மோதியது. பின்னர் மரத்தின் அருகே நின்றிருந்த 3 ஆட்டோக்கள் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 3 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய சிமெண்ட் கலவை லாரியை கிரேன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story