ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது


ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தானே,

பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒருவர் வாரிசு அடிப்படையில் தனது தந்தை செய்த வேலையை கேட்டு அதிகாரியிடம் விண்ணப்பித்து இருந்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த ஊழியர் பாலா ஜாதன் (வயது52) என்பவர் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக தரும்படி கேட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் தருவதாக கூறி விட்டு வந்த அந்த நபர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் கொடுத்த யோசனைப்படி அந்த நபர் மாநகராட்சி ஊழியர் பாலா ஜாதனிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். பணத்த்கை அவர் வாங்கிய போது பாலா ஜாதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story