இணைப்பு சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை, மகன் சாவு


இணைப்பு சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை, மகன் சாவு
x
தினத்தந்தி 27 Sep 2023 7:00 PM GMT (Updated: 27 Sep 2023 7:00 PM GMT)

காட்கோபர்-மான்கூர்டு இணைப்பு சாலையில் மோட்டார் சைக்கிலில் சென்றபோது விபத்து ஏற்பட்டு தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர்

மும்பை,

மும்பை காட்கோபர்-மான்கூர்டு இணைப்பு சாலையில் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். செம்பூரில் உள்ள ஜெய் அம்பே குடிசை பகுதி அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்றனர். படுகாயத்துடன் கிடந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர்கள் தந்தை, மகனான முகேஷ் குமார் (வயது28), ராம்ஷ்ரயா (55) என தெரியவந்தது.


Next Story