வாடகை கார் டிரைவரை கொன்று வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது


வாடகை கார் டிரைவரை கொன்று வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது
x

வாடகை கார் டிரைவரை கொன்று வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

தானே,

வாடகை கார் டிரைவரை கொன்று வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

உடல் மீட்பு

கல்யாண் டைகர் அருகே காராடி சாலையில் கடந்த 29-ந்தேதி அங்கு நின்ற வாடகை காரில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி நடத்திய ஆய்வில் பாதி ஆடையின்றி முகம் கல்லால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காரின் பதிவெண் மூலம் விசாரித்தனர். இதில் கொலையுண்டவர் முகமது அன்சாரி கார் டிரைவர் என தெரியவந்தது.

5 பேர் கைது

சம்பவம் நடந்த இடத்தில் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று அவரது காரை சிறுவன் உள்பட 5 பேர் சேர்ந்து வழிமறித்தனர். பின்னர் அவரை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அக்கும்பல் திவா, மும்ரா, கல்வா மற்றும் பாண்டுப் பகுதியில் இருந்த 5 பேரை பிடித்து கைது செய்தனர்.

இவர்கள் ஹர்சுல் சேக் (வயது36), அதிஷ் போஸ்லே (21), ஒன்கார் காசேகர் (21), பிரசாந்த் சாமி (19) மற்றும் ஒரு சிறுவன் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிடிபட்ட கும்பல் வேறு குற்றசம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story