ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் கைது


ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் கைது
x

ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கிரெடிட் கார்டு மோசடி

மும்பை சாக்கிநாக்கா பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வாடிக்கையாளர்கள் சிலர் புகார் அளித்தனர். அவர்கள் தங்கள் கிரெடிட் கார்டுக்கு வர வேண்டிய 'கேஷ்பேக்' சலுகை பணம் வருவதில்லை என புகார் அளித்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் வங்கியில் முன்பு வேலை பார்த்த நிதின் காரே (வயது 41) என்பவர் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு கேஷ்பேக் சலுகை பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

ரூ.4 கோடி மோசடி

அவர் 83 கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி சார்பில் சாக்கி நாக்கா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் தொடர்புடைய முன்னாள் வங்கி ஊழியர் நிதின் காரேயை கைது செய்தனர்.

மேலும் மோசடியில் தொடர்புடைய சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story