டெம்போ மீது அரசு பஸ் மோதி 10 பேர் காயம்


டெம்போ மீது அரசு பஸ் மோதி 10 பேர் காயம்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தானே,

தானே மாவட்டம் கல்யாணில் இருந்து புனேக்கு நேற்று காலை பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ் காலை 11 மணியளவில் மல்செஜ் மலைப்பகுதியில் சாவர்டே கிராமம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ் எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த டெம்போ மீது மோதியது. விபத்தில் பஸ்சில் இருந்த 8 பயணிகள், டெம்போவில் இருந்த 2 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தோகாவடே ஆரம்ப சுகாதார மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story