மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கணவர் கைது; தடுக்க முயன்ற மாமியார், மகள் படுகாயம்


மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கணவர் கைது; தடுக்க முயன்ற மாமியார், மகள் படுகாயம்
x
தினத்தந்தி 1 Oct 2023 7:15 PM GMT (Updated: 1 Oct 2023 7:15 PM GMT)

மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தடுக்க முயன்ற மாமியார், மகள் படுகாயமடைந்தனர்.

தானே,

மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தடுக்க முயன்ற மாமியார், மகள் படுகாயமடைந்தனர்.

வாக்குவாதம்

தானே மாவட்டம் பிவண்டி கேல்கர் பகுதியை சேர்ந்தவர் சமீர் சேக்(வயது35). இவரது மனைவி ஜரீன் அன்சாரி(30). இவர்களுக்கு 10 வயதில் மகள் இருக்கிறாள். இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த ஜரீன் அன்சாரி தனது மகளுடன் அம்பேத்கர் நகரில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது தனது மகளை பார்க்க சமீர் சேக் அங்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 29-ந்தேதி மதியம் 1 மணி அளவில் சமீர் சேக் மாமியார் வீட்டிற்கு வழக்கம்போல் வந்தார். அப்போது, அங்கிருந்த மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கணவர் கைது

இந்த வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த அவர் தான் கொண்டு வந்திருந்த சுத்தியலால் மனைவி ஜரீன் அன்சாரி தலையில் ஓங்கி அடித்தார். இதனை கண்ட மாமியார் மற்றும் மகள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் சமீர் சேக் சுத்தியலால் தாக்கினார். இந்த சம்பவத்தில் தாய், மகள் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜரீன் அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சமீர் சேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story