பிவண்டியில் பெண்ணை கடத்தி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல்; 7 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு


பிவண்டியில் பெண்ணை கடத்தி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல்; 7 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Oct 2023 7:00 PM GMT (Updated: 4 Oct 2023 7:00 PM GMT)

பிவண்டியில் பெண்ணை கடத்தி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தானே,

பிவண்டியில் பெண்ணை கடத்தி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் கடத்தல்

தானே மாவட்டம் பிவண்டி-கல்யாண் சாலை பகுதியில் 30 வயது பெண் தனது மகனுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4 பெண்கள் உள்பட 7 பேர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்தனர். பின்னர் வீட்டில் இருந்த அப்பெண்ணை குண்டு கட்டாக காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். இதனை தொடர்ந்து அப்பெண்ணின் மகனுக்கு செல்போனில் அழைப்பு விடுத்து பேசினர். அப்பெண்ணை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.3 லட்சம் தர வேண்டும் என தெரிவித்தனர்.

போலீசார் தீவிர விசாரணை

பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் சம்பவம் குறித்து சாந்திநகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் பெண்ணை மீட்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். இதற்காக சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு நடத்தி விசாரித்து வருகின்றனர். ரூ.3 லட்சம் கேட்டு பெண்ணை கடத்திசென்ற சம்பவம் பிவண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story