பாறாங்கல்லை தலையில் போட்டு மூதாட்டி கொலை


பாறாங்கல்லை தலையில் போட்டு மூதாட்டி கொலை
x

வாடா பஸ் டெப்போவில் பாறாங்கல்லை தலையில் போட்டு மூதாட்டியை படுகொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

வசாய்,

வாடா பஸ் டெப்போவில் பாறாங்கல்லை தலையில் போட்டு மூதாட்டியை படுகொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூதாட்டி கொலை

பால்கர் மாவட்டம் வாடாவில் அரசு பஸ் டெப்போ அருகே குடிசை வீட்டில் வசித்து வந்த மூதாட்டி இந்து (வயது65). பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருடன் மாற்றுத்திறனாளி மகன் மற்றும் அவரது மனைவியுடன் தங்கி இருந்தனர். நேற்று இரவு குடிசை வீட்டின் வெளியே படுத்து உறங்கினார்.

அப்போது அங்கு வந்த ஒருவர் பாறாங்கல்லை தூக்கி மூதாட்டி இந்துவின் தலையில் போட்டு உள்ளார். இதில் மண்டை உடைந்து மூதாட்டி இந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் உடலை இழுத்து சென்று மறைவிடத்தில் வீசி விட்டு தப்பி சென்றார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

வாலிபருக்கு வலைவீச்சு

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலையுண்ட மூதாட்டி இந்து பிச்சை எடுத்து வந்த இடத்தில் அபிமன்யு (24) என்ற வாலிபரும் பிச்சை எடுத்து வந்தார்.

இதில் மூதாட்டிக்கு அதிகம் பேர் பிச்சை போட்டது இவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பழிவாங்க மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. அபிமன்யு தலைமறைவாகி விட்டதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


Next Story