ஆரேகாலனியில் சிறுத்தைப்புலி குட்டி உடல் மீட்பு


ஆரேகாலனியில் சிறுத்தைப்புலி குட்டி உடல் மீட்பு
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மும்பை ஆரேகாலனியில் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் சிறுத்தைப்புலி குட்டி இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில், இறந்து கிடந்த சிறுத்தைப்புலி குட்டி 7 அல்லது 8 மாதம் உடையது ஆகும். உயிரிழந்த சிறுத்தைப்புலி குட்டியின் தொண்டை பகுதியில் காயம் இருந்ததால் மற்ற விலங்குகள் தாக்கி இருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

இதனை தொடர்ந்து சிறுத்தைப்புலி குட்டி உடலை உடற்கூறு பரிசோதனைக்கு சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிறுத்தைப்புலி குட்டி உயிரிழந்த காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story