பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பு- கணவர் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு


பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பு- கணவர் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு
x

பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த கணவர் குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவுரங்காபாத்,

புனேயை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் பீட் மாவட்டம் பார்லியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். இவருக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் அவர் கர்ப்பம் தரித்தார். கருவுற்று இருப்பது பெண் குழந்தை என்பதை சட்டவிரோதமாக அவரது கணவர் வீட்டார் தெரிந்து கொண்டனர். இந்த நிலையில் பெண்ணின் மாமியார், சுவாமி என்ற டாக்டரை வீட்டுக்கு அழைத்துள்ளார். வீட்டில் வைத்து அவர் அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்தார்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண், இதுபற்றி புனேயில் உள்ள தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அங்கு வந்து சகோதரியை தனது ஊருக்கு அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். மேலும் கட்டாய கருக்கலைப்பு செய்ததாக பார்லி சம்பாஜி நகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் பெண்ணின் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story