மந்திரி நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு


மந்திரி நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு
x

எம்.எல்.சி. தேர்தலில் வாக்களிக்க ஜாமீன் கேட்டு மந்திரி நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டிய மேல்-சபைக்கு 10 எம்.எல்.சி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதி கேட்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜெயிலில் உள்ள மந்திரி நவாப் மாலிக், முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக் ஆகியோர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். அவர் மனுவில், எம்.எல்.சி. தேர்தலில் வாக்களிக்க வசதியாக ஒரு நாள் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வாக்களிக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த அனில்தேஷ்முக், மந்திரி நவாப் மாலிக்கின் மனுவை கோர்ட்டு நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story