தாராவியில் மின்சாரம் தாக்கி தாய், மகன் பலி


தாராவியில் மின்சாரம் தாக்கி தாய், மகன் பலி
x

தாராவியில் மின்சாரம் தாக்கி தாய், மகன் பலியாகினர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

தாராவியில் மின்சாரம் தாக்கி தாய், மகன் பலியாகினர்.

அறுந்து கிடந்த மின்வயர்

மும்பை தாராவி பிரேம் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோஷிணி (வயது38). இவரது மகன் ரோஷன் கேவட் (3). நேற்று ரோஷிணி வீட்டில் இருந்து குளியல் அறைக்கு சென்றார். அப்போது அருகே போடப்பட்டு இருந்த ஏணியை பிடித்ததாக தெரிகிறது. இந்த ஏணியில் அறுந்து கிடந்த மின்வயர் தொட்டு இருந்ததால் ரோஷிணி மீது மின்சாரம் பாய்ந்தது.

உடனே அவர் அலறி சத்தம் போட்டு உள்ளார். தாயின் சத்தம் கேட்ட மகன் அலறியப்படி செய்வதறியாமல் தாயை கட்டிப்பிடித்தான். இதில் சிறுவன் ரோஷனையும் மின்சாரம் தாக்கியது.

தாய், மகன் பலி

இது பற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் மின்இணைப்பை துண்டித்து அவர்களை மீட்டனர். பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் தாய், மகன் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த தாராவி போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாராவியில் மின்சாரம் தாக்கி தாய், மகன் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story