சயான் கோலிவாடாவில் பெஸ்ட் பஸ் மோதி தாய்- மகன் பலி


சயான் கோலிவாடாவில் பெஸ்ட் பஸ் மோதி தாய்- மகன் பலி
x

சயான் அருகே பெஸ்ட் பஸ் மோதி ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பிய தாய், மகன் பலியாகினர். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

சயான் அருகே பெஸ்ட் பஸ் மோதி ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பிய தாய், மகன் பலியாகினர். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பஸ் மோதி விபத்து

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்தவர் சாவித்ரி (வயது27). இவரது மகன் தன்வீர்(7). சிறுவனுக்கு கடந்த 2 நாட்களாக சளி, காய்ச்சல் இருந்ததால் சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரிக்கு நேற்று மாலை அழைத்து சென்றார். மருத்துவ பரிசோதனை முடித்து கொண்டு வீடு திரும்பினர்.

சயான்-கோலிவாடா சவுக் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த பெஸ்ட் பஸ் தாய், மகன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

2 பேர் பலி

இந்த விபத்தில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பெஸ்ட் பஸ் டிரைவர் குருபிரசாத் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-----------------

1 More update

Next Story