நாகாலாந்து தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருக்கு ஆதரவு


நாகாலாந்து தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருக்கு ஆதரவு
x
தினத்தந்தி 20 July 2023 8:00 PM GMT (Updated: 20 July 2023 8:00 PM GMT)

நாகாலாந்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் அஜித்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அஜித்பவார் உள்பட 9 பேர் ஆளும் பா.ஜனதா அரசில் இணைந்ததுடன், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். ஆனால் கட்சி தலைவர் சரத்பவாரின் ஆதரவு கிடைக்காததால் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது. மராட்டியத்தில் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக அஜித்பவார் கூறியுள்ளார். இதேபோல நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களும் தற்போது அஜித்பவாரின் அணிக்கு தாவி உள்ளதாக தகவல் வெளியானது. நாகாலாந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் அஜித்பவார் மற்றும் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல் தலைமையில் நாகாலாந்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மற்றுமொரு பின்னடைவாக கருதப்படுகிறது.


Next Story