விபத்தில் முதியவர் பலி: குடிபோதையில் கார் ஓட்டிய டிரைவர் கைது


விபத்தில் முதியவர் பலி: குடிபோதையில் கார் ஓட்டிய டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:45 PM GMT)

விபத்தில் முதியவர் பலியான சம்பவத்தில் குடிபோதையில் கார் ஓட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை கப்பரேடு லால்பாக் பகுதியை சேர்ந்தவர் அருண் பரப் (வயது65). கடந்த 2-ந் தேதி கிர்காவில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். பின்னர் வீட்டிற்கு செல்ல அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அருண் பரப் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் அசாருதீன் கான் என்பவரை கைது செய்தனர். அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக தெரியவந்தது. இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story