மும்பையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற போதைப்பொருள் பறிமுதல்- ஒருவர் கைது


மும்பையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற போதைப்பொருள் பறிமுதல்- ஒருவர் கைது
x

மும்பையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற போதைப்பொருள் பறிமுதல்- செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு பார்சல் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அந்தேரி போதைதடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் நியூசிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட இருந்த வோல்ட் மீட்டர் பார்சலை பிரித்து பார்த்தனர். இதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 490 கிராம் எடையுள்ள மெத்தபைட்டமைன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இந்த பார்சல் மும்பையில் இருந்து பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதேபோல ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்ப இருந்த மற்றொரு பார்சலை பிரித்து போலீசார் சோதனை போட்டனர். இந்த பார்சலில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 435 கிராம் ஆம்பெடமைன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், 2 பார்சல்களையும் அனுப்பிய நபர் நவிமும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story