ரெயிலை மறித்து பயணிகள் திடீர் போராட்டம்


ரெயிலை மறித்து பயணிகள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

டிட்வாலா ரெயில் நிலையத்தில் பயணிகள் நடத்திய திடீர் ரெயில் மறியல் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

டிட்வாலா ரெயில் நிலையத்தில் பயணிகள் நடத்திய திடீர் ரெயில் மறியல் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் மறியல் போராட்டம்

மும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கசாராவில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி நோக்கி மின்சார ரெயில் நேற்று காலை புறப்பட்டு வந்தது. டிட்வாலா ரெயில் நிலையத்திற்கு வழக்கம் போல் காலை 8.18 மணிக்கு வரவேண்டும். மாறாக மின்சார ரெயில் 8.30 மணிக்கு தான் வந்து சேர்ந்தது. இதனால் அங்கு ரெயிலின் வருகைக்காக காத்து இருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.

திடீரென சில பயணிகள் தண்டவாளத்தில் குதித்து ரெயில் மறியல் போராட்டத்தில் இறங்கினர். மேலும் ரெயில்களை குறிப்பிட்ட கால நேரத்திற்குள் இயக்குமாறு கோஷம் போட்டனர்.

தாமதமாக இயக்கம்

தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் டிட்வாலா ரெயில் நிலையத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் ரெயில்களை இயக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதற்கு அதிகாரிகள் சில தொழில்நுட்ப காரணங்களால் கசாரா-சி.எஸ்.எம்.டி ரெயில் தாமதம் ஆனதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதன்பிறகு அந்த ரெயில் காலை 8.51 மணி அளவில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தினால் காலை வேளையில் மும்பைக்கு அலுவலகம் செல்லும் பயணிகளால் மிகவும் அவதி அடைந்தனர்.


1 More update

Next Story