3 வயது சிறுமியை கடத்திய நடைபாதை பெண் வியாபாரி கணவருடன் கைது


3 வயது சிறுமியை கடத்திய நடைபாதை பெண் வியாபாரி கணவருடன் கைது
x

3 வயது சிறுமியை கடத்தி சென்ற நடைபாதை பெண் வியாபாரி மற்றும் கணவரை கர்ஜத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

அம்பர்நாத்,

3 வயது சிறுமியை கடத்தி சென்ற நடைபாதை பெண் வியாபாரி மற்றும் கணவரை கர்ஜத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

சிறுமி கடத்தல்

தானே மாவட்டம் அம்பர்நாத் பி. கேபினில் வசித்து வந்த 30 வயது பெண் ஒருவர் அம்பர்நாத் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 30-ந் தேதி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த 3 வயது மகள் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார்.

பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் சிவாஜிநகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடிவந்தனர்.

தம்பதி கைது

இந்த விசாரணையில் நடைபாதையில் பழங்கள் விற்று வந்த பெண் ஒருவர் தான் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் கர்ஜத் தாலுகா சிர்ஷே கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கடத்தி செல்லப்பட்ட 3 வயது சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கடத்திய பெண் மற்றும் உடந்தையாக இருந்த கணவரையும் கைது செய்தனர். திருமணம் ஆகி 5 ஆண்டுகள் கழிந்த நிலையில் குழந்தை இல்லாததால் சிறுமியை கடத்தி சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story