பண்டிகை காலத்தை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் நடவடிக்கை; ஆயுதங்கள் வைத்திருக்க தடை


பண்டிகை காலத்தை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் நடவடிக்கை; ஆயுதங்கள் வைத்திருக்க தடை
x
தினத்தந்தி 12 Sep 2023 8:00 PM GMT (Updated: 12 Sep 2023 8:00 PM GMT)

பண்டிகை காலத்தை முன்னிட்டு மும்பையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆயுதங்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

பண்டிகை காலத்தை முன்னிட்டு மும்பையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆயுதங்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடை உத்தரவு

மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் தசரா பண்டிகை காலம் வரவுள்ளதால் பொது இடங்களில் அசாம்பாவிதம் ஏற்படா வண்ணம் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மும்பை போலீசார் நடிவடிக்கை எடுத்துள்ளனர். நகரில் அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பொதுமக்கள் வைத்திருக்க தடை விதித்து உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது.

30 நாட்கள்

இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் 9-ந்தேதி வரை 30 நாட்கள் அமலில் இருக்கும். பொது இடங்களில் பாடல்கள், இசை வாசிப்பு, ஆவேச பேச்சுகள் போன்றவற்றிக்கும் இந்த காலகட்டத்தில் தடை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story