போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆன்லைன் சூதாட்டக்காரர் வீட்டில் ரூ.14 கோடி ரொக்கம் பறிமுதல்; 14 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளியும் சிக்கியது


போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆன்லைன் சூதாட்டக்காரர் வீட்டில் ரூ.14 கோடி ரொக்கம் பறிமுதல்; 14 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளியும் சிக்கியது
x
தினத்தந்தி 24 July 2023 12:45 AM IST (Updated: 24 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆன்லைன் சூதாட்டக்காரர் வீட்டில் இருந்து ரூ.14 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 14 கிலோ தங்கமும், 200 கிலோ வெள்ளியும் சிக்கியது.

நாக்பூர்,

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆன்லைன் சூதாட்டக்காரர் வீட்டில் இருந்து ரூ.14 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 14 கிலோ தங்கமும், 200 கிலோ வெள்ளியும் சிக்கியது.

ஆன்லைன் சூதாட்டம்

நாக்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் ஆனந்த் என்ற சோந்து நவ்ரதன் ஜெயின் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது ஜெயின், தொழில் அதிபரிடம் ஆன்லைன் சூதாட்டம் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். ஆரம்பத்தில் இதற்கு தயக்கம் காட்டிய தொழில் அதிபர், பின்னர் ஹவாலா மூலமாக ரூ.8 லட்சத்தை ஜெயினிடம் அளித்துள்ளார். இதையடுத்து தொழில் அதிபர் பெயரில் ஆன்லைன் சூதாட்ட கணக்கை திறப்பதற்கான ஒரு இணைப்பை வாட்ஸ் அப் மூலமாக ஜெயின் வழங்கினார். அந்த கணக்கில் தொழில் அதிபர் பெயரில் ரூ.8 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. அந்த பணத்தை வைத்து தொழில் அதிபர் சூதாட்டத்தில் ஈடுபட தொடங்கினார்.

ரூ.58 கோடி இழப்பு

தொடக்கத்தில் கிடைத்த வெற்றி மூலமாக அந்த விளையாட்டுக்கு அடிமையான தொழில் அதிபர், கோடிக்கணக்கான பணத்தை சூதாட்டத்தில் வாரி இறைத்துள்ளார். ஆனால் தொடர் தோல்வியே அவருக்கு மிஞ்சியது. இதன் மூலம் ரூ.58 கோடியை அவர் இழந்துள்ளார். தான் பெரும் நஷ்டமடைந்ததை உணர்ந்த தொழில் அதிபர் தனது பணத்தை ஜெயினிடம் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் ஜெயின் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த தொழில் அதிபர் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார்.

ரூ.17 கோடி பறிமுதல்

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோண்டியாவில் உள்ள ஜெயினின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து கட்டு, கட்டாக பணம், தங்கம், வெள்ளி கட்டிகள் அதிகளவில் சிக்கியது. அவரது வீட்டில் இருந்து ரூ.17 கோடி ரொக்கம் மற்றும் 14 கிலோ தங்க கட்டிகள், 200 கிலோ வெள்ளியை போலீசார் கைப்பற்றினர். மேலும் ஜெயின் ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதற்கான ஆதாரமும் போலீசாரிடம் சிக்கியது. இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்ததும், ஜெயின் வீட்டில் இருந்து தப்பிஓடி தலைமறைவாகிவிட்டார். அவர் துபாய்க்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

1 More update

Next Story