பாண்டுப் துணி ஆலையில் திடீர் தீ


பாண்டுப் துணி ஆலையில் திடீர் தீ
x
தினத்தந்தி 20 March 2023 12:30 AM IST (Updated: 20 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

மும்பை பாண்டுப்பில் ஒரு மாடி கொண்ட கட்டிடத்தில் துணி ஆலை இயங்கி வருகிறது. நேற்று காலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

ஆலையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி ேநரம் போராடி அங்கு பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story