ரசாயனத்தை நதியில் கலந்த டேங்கர் லாரி டிரைவர் கைது
ரசாயனத்தை நதியில் கலந்த டேங்கர் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தானே,
தானேயில் உள்ள வால்துனி நதியில் சம்பவத்தன்று டேங்கர் லாரி டிரைவர் ஒருவர் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனத்தை கலந்து கொண்டு இருந்தார். இதை பார்த்த சிலர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது டிரைவர் டேங்கரில் இருந்த ரசாயனத்தை நதியில் கலந்து அதை மாசுப்படுத்தி கொண்டு இருந்தார்.
இதையடுத்து போலீசார் 32 வயது டேங்கர் லாரி டிரைவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story