15 வயது சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது - 4 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டார்


15 வயது சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது - 4 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 22 Jun 2023 8:00 PM GMT (Updated: 22 Jun 2023 8:00 PM GMT)

15 வயது சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 4 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் போலீசில் பிடிபட்டு உள்ளார்.

வசாய்.

15 வயது சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 4 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் போலீசில் பிடிபட்டு உள்ளார்.

சிறுமி கடத்தல்

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு சாத்திவிலியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காமல் போனதால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிர்சோபாத்தை சேர்ந்த ராஜா ராம்பீர் யாதவ் (வயது22) என்பவர் சிறுமியை கடத்தி சென்றதாக தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் அங்கு சென்றபோது தப்பி சென்று விட்டார். இதனால் போலீசார் அவரது உறவினரிடம் விசாரித்து வந்தனர்.

போலீசில் பிடிபட்டார்

இதற்கிடையில் அவரது சகோதரரிடம் ராஜா ராம்பீர் யாதவ் தொடர்பு கொண்டு பேசியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தின் அபோகர் கிராமத்தில் கூலி வேலை பார்த்து வருவதாகவும், கடத்தி சென்ற சிறுமியை திருமணம் செய்து தற்போது கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடந்த 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த அவர் தற்போது போலீசில் பிடிபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story