கிரிக்கெட் பந்தை எடுக்க சென்றபோது கல்குவாரியில் மூழ்கி சிறுவன் பலி


கிரிக்கெட் பந்தை எடுக்க சென்றபோது கல்குவாரியில் மூழ்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 5 Aug 2023 7:30 PM GMT (Updated: 5 Aug 2023 7:30 PM GMT)

பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற போது கல்குவாரியில் மூழ்கி சிறுவன் பலியானான்

வசாய்,

பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்த சிறுவன் யாஷ் சோல்கர் (வயது17). இவன் நேற்று முன்தினம் மற்ற சிறுவர்களுடன் அப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான். அப்போது பந்து குவாரி தண்ணீரில் போய் விழுந்தது. இதனை எடுக்க சிறுவன் யாஷ் சோல்கர் சென்றான். தண்ணீரில் இறங்கிய போது ஆழமான இடத்திற்கு சென்றதால் அவன் நிலைதடுமாறி உள்ளே மூழ்கினான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குவாரியில் மூழ்கிய சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களது முயற்சி தோல்வியடைந்ததால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன எந்திரம் மூலம் குவாரியில் மூழ்கிய சிறுவனை பிணமாக மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story