வேன் மோதிய விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்து பெண் கருகிச் சாவு - கணவர் கண் முன்னே சோகம்


வேன் மோதிய விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்து பெண் கருகிச் சாவு - கணவர் கண் முன்னே சோகம்
x
தினத்தந்தி 23 Jun 2023 7:30 PM GMT (Updated: 24 Jun 2023 4:50 AM GMT)

ஜால்னாவில் விபத்தில் சிக்கிய காரில் ஏற்பட்ட திடீர் தீயில் சிக்கி கணவர் கண்முன்பே மனைவி உடல் கருகி பலியானார்.

ஜால்னா,

ஜால்னாவில் விபத்தில் சிக்கிய காரில் ஏற்பட்ட திடீர் தீயில் சிக்கி கணவர் கண்முன்பே மனைவி உடல் கருகி பலியானார்.

காரில் தீ விபத்து

ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் அமோல். இவரது மனைவி சவிதா (வயது32). நேற்று காலை இருவரும் லோனார் நோக்கி காரில் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது மாந்தா தாலுகா கர்லா கிராமம் அருகே பின்னால் வந்த வேன் ஒன்று அவர்களின் காரின் மீது மோதியது. இதனால் அமோல் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். காரின் மீது மோதிய வேன் டிரைவரை நோக்கி கோவத்துடன் சென்றார். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட அமோல் அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக காரின் உள்ளே இருந்த மனைவி சவிதாவை மீட்க விரைந்து சென்றார். ஆனால் சிறிது நேரத்திற்குள் வேகமாக பரவிய தீ கார் மூழுவதும் பற்றி எரிய தொடங்கியது.

மனைவி உடல் கருகிச்சாவு

மனைவியை காப்பாற்ற அமோல் போராடினார். மேலும் வெளியே வர முடியாமல் சவிதா தீயில் கருகி பலியானார். தன் கண்முன்பே மனைவி தீயில் சிக்கி பலியானதால் அமோல் வேதனை தாங்க முடியாமல் அழுது புரண்டார். மனைவியை காப்பாற்றும் முயற்சியில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றிய தீயை அணைத்தனர். உள்ளே இருந்த சவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காயமடைந்த அமோலை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து மாந்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story