ரூ.4½ கோடி போதைப்பொருள் கடத்திய பெண் பயணி கைது


ரூ.4½ கோடி போதைப்பொருள் கடத்திய பெண் பயணி கைது
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செருப்பில் மறைத்து வைத்து ரூ.4½ கோடி போதைப்பொருள் கடத்திய பெண் பயணி பேண் பயணி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கடந்த மாதம் 29-ந்தேதி விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை செய்தனர். இதில் ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் உடைமைகளில் சோதனை நடத்தினர். இதில் செருப்பில் குழி அமைத்து 490 கிராம் கோகைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 50 லட்சம் ஆகும். இதையடுத்து அப்பெண்ணை போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் பயணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். போதைப்பொருள் கடத்தி வந்த பெண் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story