மரம்வெட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மரம்வெட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

வாஷியில் மரம் வெட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

வாஷியில் மரம் வெட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

மரம் வெட்டும் பணி

நவிமும்பை வாஷி பகுதியில் நியு ஆலக்நந்தா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. மழைக்காலத்தையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த கட்டிடத்தில் உள்ள மரக்கிளைகளை சம்பவத்தன்று தொழிலாளர்கள் வெட்டினர். இதில் கவுதம் கரீப் (வயது45) என்ற தொழிலாளி ஒரு மரத்தின் உச்சியில் இருந்த மரக்கிளைகளை வெட்டி கொண்டு இருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது எதிர்பாரதவிதமாக அந்த வழியாக சென்ற மின்வயரில் தொழிலாளியின் அரிவாள் பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. மற்ற தொழிலாளிகள், கவுதம் கரீப்பை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தொழிலாளியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து வாஷி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story