டிரைவரை கொன்று தலைமறைவான வாலிபர்- 4 ஆண்டுகளுக்கு பின் கைது


டிரைவரை கொன்று தலைமறைவான வாலிபர்- 4 ஆண்டுகளுக்கு பின் கைது
x

டிரைவரை கொன்று தலைமறைவான வாலிபரை போலீசார் 4 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

தானே,

தானேயை சேர்ந்தவர் ராஜ்பகதூர் (வயது 37). டிரைவரான இவரிடம், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் சச்சின் சுனில் என்பவர் மதுவாங்க பணம் தரும்படி கேட்டு உள்ளார். இதற்கு ராஜ்பகதூர் மறுத்ததால், ஆத்திரமடைந்த சச்சின் சுனில் மரக்கட்டையால் அவரை தாக்கிவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ராஜ்பகதூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராஜ்பகதூர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான சச்சின் சுனிலை தேடி வந்தனர்.

கடந்த 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த அவர், உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அங்கு வந்த சச்சின் சுனிலை பிடித்து கைது செய்தனர். பின்னர் தானே அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-----


Next Story