டோனி,சாக்‌ஷி மாலிக், சிந்துவுக்கு பத்ம விருது மத்திய அரசு ஒப்புதல்!


டோனி,சாக்‌ஷி மாலிக், சிந்துவுக்கு பத்ம விருது மத்திய அரசு ஒப்புதல்!
x
தினத்தந்தி 24 Jan 2017 5:11 AM GMT (Updated: 24 Jan 2017 5:11 AM GMT)

டோனி, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து சாக்‌ஷி மாலிக் ஆகியோரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்காக மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிந்தவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அதில் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து,அவரது பயற்சியாளர் கோபிசந்த் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் ஆகியோரின் பெயர்கள் பத்ம விருதுகளுக்காக மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

இந்நிலையில் டோனி, சிந்து, கோபிசந்த் ஆகியோரின் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், அவர்களுக்கு எந்த வகையான பத்ம விருதுகள் வழங்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. குடியரசு தினத்தன்று அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story