உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை அபுர்வி தங்கம் வென்றார்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை அபுர்வி தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 27 May 2019 2:04 AM IST (Updated: 27 May 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது.

முனிச், 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அபுர்வி சண்டிலா 251 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அவருக்கு கடும் சவால் அளித்த சீனாவின் வாங் லுயாவ் மயிரிழையில் பின்தங்கி (250.8 புள்ளி) வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திப்பட வேண்டியதாயிற்று. ஜெய்ப்பூரைச் சேர்ந்த 26 வயதான அபுர்வி சண்டிலா உலக கோப்பை போட்டியில் வென்ற 4-வது பதக்கம் இதுவாகும்.
1 More update

Next Story