பாரா ஒலிம்பிக்: பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை பவினா


பாரா ஒலிம்பிக்: பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை பவினா
x
தினத்தந்தி 27 Aug 2021 1:07 PM GMT (Updated: 27 Aug 2021 1:07 PM GMT)

பாரஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினா பென் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

பாராஒலிம்பிக் போட்டியின் 4-வது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உறுதியாகியுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பவினா 11-5, 11-6, 11-7 என்ற செட்  கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

Next Story