பாரா ஒலிம்பிக்: பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை பவினா
பாரஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினா பென் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாராஒலிம்பிக் போட்டியின் 4-வது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உறுதியாகியுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பவினா 11-5, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
Related Tags :
Next Story