பாரா ஒலிம்பிக்: மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்


பாரா ஒலிம்பிக்: மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 31 Aug 2021 5:16 PM IST (Updated: 31 Aug 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ, 

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் 8-வது நாளான இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் பிரிவில்  இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி  வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.  

உயரம் தாண்டுதலில் வெண்கலபதக்கத்தை  பீகாரை சேர்ந்த சரத்குமார் வென்றார்.உயரம் தாண்டுதல் பிரிவில்   அமெரிக்க வீரர் கிரீவ் சாம் தங்கம் வென்றார். 
1 More update

Next Story