தீவிர காற்றுமாசு வட இந்தியர்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறையும் அபாயம்...! ஆய்வு எச்சரிக்கை


தீவிர காற்றுமாசு  வட இந்தியர்களின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் குறையும் அபாயம்...! ஆய்வு எச்சரிக்கை
x

உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரான டெல்லியைப் பொறுத்தவரை, மக்கள் தங்கள் வாழ்நாளில் 10 வருடங்களை இழக்க நேரிடும்.

புதுடெல்லி:

வங்காளதேசத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மாசுபட்ட நாடாக இந்தியா உள்ளது. காற்று மாசால் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் ஐந்தாண்டுகளால் குறைக்கிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை அமைப்பௌ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் உண்மையில் காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இந்தோ கங்கை சமவெளிகளில் வாழும் 40 சதவீத இந்தியர்களின் ஆயுட்காலத்தை 7. 6 வருடங்களைக் குறைக்கும் என்று கூறுகிறது.

இந்தியாவில் காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது மனிதர்களின் ஆயுட்காலத்தை ஐந்து வருடங்கள் குறைக்கிறது, அதே சமயம் குழந்தை மற்றும் தாயின் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 1.8 வருடம் குறைக்கிறது. புகைபிடித்தல் மூலம் சராசரியாக 1. 5 வருடம் குறைகிறது.

வட இந்தியாவின் இந்தோ கங்கை சமவெளிகளில், 51. கோடி மக்கள் வாழ்கிறார்கள். இது இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் ஆகும். தற்போதைய காற்று மாசு அளவுகள் தொடர்ந்தால் அங்கு வாழும் மக்கள் சராசரியாக 7. 6 வருட ஆயுட்காலம் இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரான டெல்லியைப் பொறுத்தவரை, மக்கள் தங்கள் வாழ்நாளில் 10 வருடங்களை இழக்க நேரிடும்.


இந்தியா 2019 இல் அதன் தேசிய சுத்தமான காற்று திட்டத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் 2017 அளவுகளுடன் ஒப்பிடுகையில் 20-30 சதவீதம் வரை துகள் மாசுபாட்டைக் குறைக்கும் இலக்குடன் அறிமுகப்படுத்தியது.

2020 ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை ஆய்வு செய்ததில் 2013 ஆம் ஆண்டிலிருந்து உலகின் மாசு அதிகரிப்பில் 44 சதவீதம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது என்றும், உலகின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான தெற்காசியாவில் - காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு இருந்தபோதிலும் தொற்றுநோயின் முதல் ஆண்டு. 1998 முதல், இந்தியாவின் சராசரி வருடாந்திர துகள் மாசுபாடு (பிஎம்2. 5) 61 சதவீதம் அதிகமாக அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், ஆண்டுதோறும் 70 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் உலகில் பல்வேறு மாசுபடுத்திகளின் வெளிப்பாட்டுகலூடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 80 சதவீத இறப்புகள் பி.எம் 2. 5 வெளிப்பாடு காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அனைத்து காற்று மாசுபாடுகளிலும், உள்ளிழுக்கக்கூடிய பிஎம் 2. 5 மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது சுவாசத்தின் மூலம் நுரையீரலில் படிந்து தீவிர சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது புகைபிடிப்புடன் ஒப்பிடத்தக்கது, மதுபானம் மற்றும் பாதுகாப்பற்ற தண்ணீரை விட மூன்று மடங்கு அதிகமாகும், எச் ஐவி / எய்ட்ஸ் ஐ விட ஆறு மடங்கு அதிகமாகும். , மற்றும் மோதல் மற்றும் பயங்கரவாதத்தை விட 89 மடங்குஅதிகமாகும்.


உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் ஆண்டு சராசரி துகள் மாசு அளவை மீறும் பகுதிகளில் ஒட்டுமொத்த இந்திய மக்களும் வாழ்கின்றனர். 63 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டின் சொந்த தேசிய காற்றின் தரத் தரமான 40 µg/m3 ஐத் தாண்டிய பகுதிகளில் வாழ்கின்றனர் என கூறப்படுகிறது.


Next Story