தமிழக தபால் நிலையங்களில் வேலை


தமிழக தபால் நிலையங்களில் வேலை
x

இந்திய அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவாக் (ஜி.டி.எஸ்) மூலம் நாடு முழுவதும் உள்ள தபால் நிலைய கிளைகளில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் ஆகிய பதவிக்கு 40 ஆயிரத்து 889 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மட்டும் 3,167 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உள்ளூர் மொழி தெரிந்தவர்களாகவும், கம்ப்யூட்டரில் பணி புரிய தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்டுவதற்கு தெரிந்திருக்க வேண்டும்.

16-2-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

10-ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையிலான மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-2-2023.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.


Next Story