நீதித்துறையில் பணிவாய்ப்பு


நீதித்துறையில் பணிவாய்ப்பு
x

சென்னை உயர் நீதிமன்றம் (MHC) அல்லது மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தேர்வாளர், ரீடர் சீனியர் மாநகர், ஜூனியர் மாநகர் மற்றும் ஜெராக்ஸ் ஆபரேட்டர் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு சார்பில் தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலுள்ள துணை நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், டிரைவர் உள்பட மொத்தம் 1,412 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வயது வரம்பு, விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://mhc.tn.gov.in/recruitment/login என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-8-2022.


Next Story