நாகை-திருவாரூர் நெடுஞ்சாலையில் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதாரக்கேடு


நாகை-திருவாரூர் நெடுஞ்சாலையில் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதாரக்கேடு
x

நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருவதுடன் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருவதுடன் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் தீவைத்து எரிப்பு

நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் பணியாளர்களால் எடுத்துச்சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரிக்கப்பட்டு அங்கு கொட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக ஊராட்சியில் பணிபுரிபவர்கள் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில இடங்களில் தீயிட்டுக் கொளுத்தி வருகின்றனர்.

புகை மூட்டம்-சுகாதார கேடு

இவ்வாறு கொளுத்தப்படும் தீயினால் ஏற்படும் புகை மூட்டத்தால் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.

தடுக்க நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊராட்சி பகுதியில் உள்ள பொது இடங்களில் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story