தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு


தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 6:45 PM GMT)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

14 மீனவர்கள் கைது

ராமேசுவரத்திலிருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துமீறல்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்தவர்களா அல்லது புதுக்ேகாட்டை, நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களா? என்ற முழு விவரம் இன்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்று கூறப்படுகின்றது. ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ள நிலையில், அடுத்த நாளே மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story