மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி

மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
அருமடல் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அலமேலு (வயது 37). இவர் கடந்த 3-ந்தேதி மாலை வயலில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. அலமேலு மழைக்காக அருகே உள்ள புளியமரத்தடியில் ஒதுங்கி நின்றார். திடீரென்று மின்னல் தாக்கி அலமேலு சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதைத்தொடர்ந்து அலமேலுவின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மொத்தம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





