சிறுமியிடம் சில்மிஷம்; கொத்தனார் கைது


சிறுமியிடம் சில்மிஷம்; கொத்தனார் கைது
x

சேலத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் கந்தம்பட்டி அருகே உள்ள செஞ்சி கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60), கொத்தனார். இவரது பேத்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சி இவரது வீட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி கலந்து கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த சிறுமியிடம் ஜெயராமன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் ஜெயராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

1 More update

Next Story