உண்டியல்கள் மூலம் ரூ.1¼ கோடி காணிக்கை


உண்டியல்கள் மூலம் ரூ.1¼ கோடி காணிக்கை
x

உண்டியல்கள் மூலம் ரூ.1¼ கோடி காணிக்கை கிடைத்தது.

திருச்சி

சமயபுரம்:

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் கோவிலில் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகளை, கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக ரூ.1 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 687 ரொக்கமும், 3 கிலோ, 973 கிராம் தங்கமும், 7 கிலோ 645 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.


Next Story