கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் தமிழக-கேரள எல்லையான கோபாலபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்ணாமடையை சேர்ந்த டிரைவர் சல்மான் பரிஸ் (வயது 22) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆட்டோவில் 26 மூட்டைகளில் இருந்த 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story