பாம்பு கடித்து 1 வயது குழந்தை பலி


பாம்பு கடித்து 1 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 20 Jun 2023 7:24 PM GMT (Updated: 21 Jun 2023 12:11 PM GMT)

பாம்பு கடித்து 1 வயது குழந்தை இறந்தது.

திருச்சி

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த சோபனபுரம் பிரதான வீதியை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி தீபா. இந்த தம்பதியின் மகன் ஹரிசுதன் (வயது 1). நேற்று வீட்டில் தீபா சமையல் செய்து கொண்டிருந்தார். இதனிடையே ஹரிசுதன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அவன் சுவற்றிலிருந்த எலி பொந்துக்குள் கையை விட்டதாக தெரிகிறது. அதில் பதுங்கி இருந்த பாம்பு ஹரிசுதனை கடித்தது. இதனால் அலறி துடித்த அவனை தீபா உடனடியாக உப்பிலியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின் மேல்சிகிச்சைக்காக அவனை துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஹரிசுதன் இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story