நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு


நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
x

நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே முல்லைத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை, மயிலாடுதுறை மீனவர்கள் 10 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். மீனவர்களை கைது செய்ததுடன், அவர்கள் வந்த விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து திரிகோணமலைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் இலங்கை திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 10 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story