7 ஆண்கள் உள்பட தமிழ்நாட்டில் 10 பேருக்கு கொரோனா


7 ஆண்கள் உள்பட தமிழ்நாட்டில் 10 பேருக்கு கொரோனா
x

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் நேற்று 10 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 10 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக செங்கல்பட்டில் 2 பேரும், கிருஷ்ணகிரியில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 7 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 13 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 81 ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை.


Next Story