10 சதவீத இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு...!


10 சதவீத இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு...!
x

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினர். பின்னர் கூட்டத்தில் முடிவில் 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் முடிவு செய்யப்பட்டது.


Next Story