தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்


தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
x
தினத்தந்தி 7 Aug 2023 1:07 PM IST (Updated: 7 Aug 2023 1:14 PM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நாகை,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் திரிகோணமலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

1 More update

Next Story