சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 23 Jun 2023 9:00 PM GMT (Updated: 23 Jun 2023 9:00 PM GMT)

திண்டுக்கல்லில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் குளத்தூர் அருகே உள்ள ஆர்.வி.எஸ். நகரை சேர்ந்தவர் கனகபாண்டி (வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு இவர், 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கனகபாண்டி மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கனக பாண்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Next Story